Showing posts with label #ஶ்ரீ. Show all posts
Showing posts with label #ஶ்ரீ. Show all posts

August 30, 2021

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்தியை விரதமிருந்து கொண்டாடும் விதம்:

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று
நடு இரவில் கிருஷ்ணனை
தொட்டில் போட்டு பிறந்த நாளைக்
கொண்டாடும் வரையில், விரதம்
இருக்க வேண்டும் நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச
விரதத்தை முடிக்கலாம் அல்லது
மறு நாள் காலையில் தஹிகலாவை
உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். த ஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலா
என்பர். வரஜ பூமியில்nதயிர்
கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான்
எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான்.இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக த ஹிகலா தயாரிப்பதும் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.மக்கள் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
வெண்ணை மிகவும் பிடித்த
மானது என நினைத்து அதை கிருஷ்ணனுக் நிவேதனம் செய்கின்றனர். உண்மையில்
கொடுங்கோல் மன்னனான
கம்சன் மக்களுக்கு அதிக வரி
ஆனால் விதித்தான். அந்த வரியைக்
கட்டுவதற்காக மக்கள்
வெண்ணையை விற்கும்
கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறானமுறையில்வரிவிதித்து மக் ளைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன்
வெண்ணையைத் தின்பதும் அதை வாரிbஇறைப்பதுமானnசெயல்களைச் செய்தால்ன். அவ்வாறு எதிர்த்துப் போராடும்nகுணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான். மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல்
விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை
தயிர் வெண்ணை பால் போன்
பலவிதமான பண்டங்களை உண் ணுவார்கள் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் வரஜபூமியில் ஸ்ரீ கிருஷ்ணன் தனது
உணவுடன் தன் சகாக்கள் காண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும
ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள் இந்நிகழ்ச் சிலை அடிப்ப படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகிvவிட்டது. இதைத்தான்நம் ஊரில்bஉறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
...