November 09, 2020

புதிய பார்வை!

புதிய பார்வை!
🙏

சில காயங்கள் 
*மருந்தால்* 
சரியாகும். 

சில காயங்கள் 
*மறந்தால்*  
சரியாகும்...

மனிதனுக்கு  
*பிரச்சனை*. 

அதனால்,
கடவுளுக்கு  
*அர்ச்சனை*...

*வறுமை*  
வந்தால் 
வாடக்கூடாது. 

*வசதி* 
வந்தால் 
ஆடக்கூடாது...

*கருப்பு*  
மனிதனின் 
இரத்தமும் 
சிவப்புதான். 

*சிவப்பு*  
மனிதனின் 
நிழலும் 
கருப்புதான்...

வியர்வை 
துளிகள் 
*உப்பாக*  
இருக்கலாம். 

ஆனால், 
அவை 
வாழ்க்கையை  
*இனிப்பாக*  
மாற்றும்...

*வீரன்*  
சாவது
இல்லை. 

*கோழை*  
வாழ்வதே 
இல்லை...

உன்னை நீ 
*செதுக்கி* 
*கொண்டே* 
இரு.

*வெற்றி*  
பெற்றால் 
சிலை.

*தோல்வி* 
அடைந்தால் 
சிற்பி...

மனிதனுக்கு 
ABCD  
*தெரியும்*. 

ஆனா *"Q"* ல 
போக *தெரியாது*.

எறும்புகளுக்கு 
ABCD 
*தெரியாது*.
 
ஆனா *"Q"* ல 
போக *தெரியும்*...

உண்மை 
எப்போதும்  
*சுருக்கமாக*  
பேசப்படுகிறது. 

பொய் 
எப்போதும் 
*விரிவாக* 
பேசப்படுகிறது...

பேசிப்பேசியே 
நம்மை 
ஏமாற்றுகிறார்கள் 
என்பதெல்லாம்  
*பொய்*.

அவர்கள் 
பேச்சில், நாம் 
ஏமாந்து 
விடுகிறோம், 
என்பதே  
*உண்மை*... 

குறைகளை  
*தன்னிடம்* 
தேடுபவன் 
தெளிவடைகிறான். 

குறைகளை  
*பிறரிடம்*  
தேடுபவன் 
களங்கப்படுகிறான்.

*கடனாக* 
இருந்தாலும்சரி,
*அன்பாக*  
இருந்தாலும் சரி. 

*திருப்பி* 
*செலுத்தினால்தான்* 
மதிப்பு...

உறவினர்களில் 
யார் 
முக்கியம் 
என்பதை...
  
*உயிரற்ற* 
பணமே 
முடிவு செய்கிறது...

பணம் 
கொடுத்துப்பார்.
 
உறவுகள் உன்னை  
*போற்றும்*.

கொடுத்த 
பணத்தை 
திரும்ப 
கேட்டுப்பார்.
 
மண்ணை வாரி
*தூற்றும்*...

அறுந்து போன 
செருப்புக்கு கூட,
வீட்டில் 
ஒரு இடம் 
*உண்டு*.

இறந்து போன 
மனித உடலுக்கு, 
வீட்டில் 
ஒரு இடமும் 
*இல்லை*...

இதுதான்
உண்மை.

இதுவே
வாழ்க்கை...


...

No comments: